2. நானே உங்களை வருத்தப்படுத்தினால், யார் எனக்கு மகிழ்வூட்ட முடியும்? என்னால் வருத்தத்திற்கு உள்ளான நீங்களா மகிழ்வூட்ட முடியும்?
|
3. இதைத்தான் நான் ஏற்கெனவே எழுதினேன். நான் வரும் போது எனக்கு மகிழ்ச்சி தரவேண்டிய உங்களாலே எனக்கு வருத்தம் ஏற்படக்கூடாதென்று அப்படி எழுதினேன். எனது மகிழ்ச்சியை உங்கள் அனைவருடைய மகிழ்ச்சியாகவே கொள்வீர்கள் என்று உங்கள்மேல் நம்பிக்கை கொண்டுள்ளேன்.
|
4. மிகுந்த வேதனையோடும், உடைந்த உள்ளத்தோடும், கலங்கிய கண்களோடும் இதை எழுதினேன். இப்படி எழுதியது உங்களுக்கு வருத்தம் தருவதற்கன்று. உங்கள்மேல நான் வைத்திருக்கும் பேரன்பை நீங்கள் அறிந்து கொள்ளவேண்டும் என்பதற்கே.
|
5. ஒருவன் வருத்தம் வருவித்தான் என்றால், எனக்கு வருவிக்கவில்லை. ஒரளவில் உங்கள் அனைவருக்குமே வருத்தம் வருவித்தான் என்பது மிகையாகாது.
|
7. ஆதலால் அவன் மிகுதியான வருத்தத்தில் மூழ்கிவிடாதபடி, நீங்கள் அவனை இப்பொழுது மன்னித்து அவனுக்கு ஊக்கம் அளிப்பதுதான் நல்லது.
|
10. நீங்கள் ஒருவனை மன்னித்தால், நானும் அவனை மன்னிக்கிறேன்; ஏனெனில், நான் மன்னிக்கவேண்டியது ஏதாவது இருந்தால், அதைக் கிறிஸ்துவின் முன்னிலையில் உங்களுக்காக ஏற்கெனவே மன்னித்துவிட்டேன்.
|
12. நான் கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவிக்கும்படி துரோவா ஊருக்கு வந்தபோது, ஆண்டவருக்குத் தொண்டாற்ற எனக்கு நல்ல வாய்ப்பு இருந்தும்,
|
13. என் தம்பி தீத்துவைக் காணாததால், என் உள்ளம் அமைதியின்றித் தவித்தது; உடனே அங்கிருந்தவர்களிடம் விடைபெற்றுக்கொண்டு மக்கெதோனியாவுக்குப் புறப்பட்டேன்.
|
14. கிறிஸ்துவுக்குள் வாழும் எங்களை எப்போதும் கிறிஸ்துவின் வெற்றிப் பவனியில் பங்குபெறச் செய்து, தம்மைப்பற்றிய அறிவு, எங்கள் வழியாக நறுமணமென எங்கும் பரவச்செய்யும் கடவுளுக்கு நன்றி.
|
15. ஆம், நாங்கள் மீட்புப் பெறுவோரிடையிலும், அழிவுறுவோரிடையிலும், கடவுள்பால் எழும் கிறிஸ்துவின் நறுமணமாய் இருக்கிறோம்.
|
16. சிலருக்கு அது சாவு விளைவிக்கும் நச்சுப் புகையாகும்; வேறு சிலருக்கு வாழ்வளிக்கும் நறுமணமாகும். இத்தகைய பணிக்கு ஏற்றவன் யார்?
|
17. கடவுளின் சொல்லை விலைகூறித் திரிபவர் பலரைப்போல் நாங்கள் செய்யாமல், கள்ளமற்ற உள்ளத்தோடு கடவுளால் ஏவப்பட்டு, கிறிஸ்துவுக்குள், கடவுளின் முன்னிலையில் பேசுகிறோம்.
|